நாளை முதல் 13 மாவட்டங்களில் பலத்த மழை - வானிலை ஆய்வு மையம் தகவல் !!!

நாளை முதல் 13 மாவட்டங்களில் பலத்த மழை - வானிலை ஆய்வு மையம் தகவல் !!!

மழை

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இத்தகைய சூழலில் கடந்த சில வாரங்களாக கோடை மழை பெய்து வருகிறது. அதேசமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இது தொடர்பாக இந்திய மாநில ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு வங்க கடலில் நாளை மறுநாள் 22.05.2024 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் தமிழ்நாட்டில் 23ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு வங்கக்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் மே 23ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று 20.05.2024 வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன் படி நீலகிரி ,கோயம்புத்தூர் ,திருப்பூர், தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழுக்கு வாய்ப்பு உள்ளது.

அதே சமயம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ,தென்காசி, விருதுநகர் ,ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கன மழை நிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னியாகுமரி ,திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ,நீலகிரி, சிவகங்கை புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

Tags

Next Story