தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் !!!!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் !!!!

மழை

கோடை மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் சற்று குளிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய காலம் முதல் வெயில் சுட்டெரிந்து வந்தது வெயிலின் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால் சாலையில் மக்கள் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டது.

தென் மாவட்டங்களில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவோ கோடை மழை பெய்து சற்று குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த மழை நேற்று பரவலாக மாநிலம் முழுவதும் பெய்து குளிர்வித்தது.

அதன் தொடர்ச்சியாக வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் உள்ள மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இதில் கன்னியாகுமரி ,நெல்லை ,தூத்துக்குடி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும் விருதுநகர், ராமநாதபுரம் ,சிவகங்கை ,மதுரை ,திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம், மயிலாடுதுறை ,திருப்பூர், கோவை ,நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஒரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Tags

Next Story