கனமழை: என்.எல்.சியில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி தற்காலிக நிறுத்தம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் நெய்வேலி என்எல்சி சுரங்கப் பகுதியில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் நிலக்கரி வெட்டி எடுக்கும் இயந்திரங்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. போதுமான அளவு நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags
Next Story