உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

ப்ளஸ் டூ முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி பயில வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி பயில வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story