ஒகேனக்கல் : காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1500 கன அடியாக அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான ஒகேனக்கல் காவிரி ஆறு. கடந்த சில வாரங்களாக காவேரி ஆற்றில் நீர் வரத்து சரிந்து மணல் திட்டு, ஐந்தருவி, சினி பால்ஸ், தொங்கும் பாலம் உள்ள பகுதிகளில் பாறைகளாக காட்சி அளித்த காவிரி ஆற்றில் தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நீர் வரத்து படிப்படியாக அதிகரிக்க துவங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1200 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 1500 கன அடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story