வேலூரில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

வேலூரில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

ஹோலி பண்டிகை

வேலூரில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மராட்டியம், குஜராத் போன்ற சில மாநிலங்களில் ஹோலி பண்டிகையை ஒரு வாரம் வரை மக்கள் கொண்டாடுகின்றனர். மக்களிடையே மகிழ்ச்சியையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியே இந்த பண்டிகை கொண்டாடப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அந்த வகையில் வேலூரை அடுத்த இடையன்சாத்து பகுதியில் ஜெயின் சமூகத்தினர் மற்றும் சிறுவர், சிறுமிகள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடியை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

Tags

Next Story