சேலத்தில் ஓட்டல் தொழிலாளி தற்கொலை

சேலத்தில் ஓட்டல் தொழிலாளி தற்கொலை

கோப்பு படம் 

சேலத்தில் ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் அரியாகவுண்டம்பட்டி தாரமங்கலம் மெயின் ரோடு சர்க்கரை புளிய மரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு பாரதி (30) என்ற மனைவியும் 3 வயதில் மகளும் உள்ளனர். பாரதி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். மணிகண்டன் நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கச்சென்றார்.

பின்னர் அதிகாலையில் எழுந்து வீட்டில் இருந்த மின்விசிறி கொக்கியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு பாரதி கதறி அழுதார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து தூக்கில் தொங்கிய மணிகண்டனின் உடலை கீழே இறக்கி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story