அமைச்சர் எ.வ.வேலுவிற்கு நெருக்கமான திமுக பிரமுகர்கள் வீடுகளில் சோதனை

அமைச்சர் எ.வ.வேலுவிற்கு நெருக்கமான திமுக பிரமுகர்கள் வீடுகளில் சோதனை

வருமான வரித்துறை சோதனை 

கோவையில் திமுக பிரமுகர்களின் வீடு, வணிக நிறுவனங்கள் என ஐந்து இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரிகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று கார்களில் வந்துள்ள அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபகுதியில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீ ராமின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.மூன்று கார்களில் வந்துள்ள பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இதே போல் சிங்காநல்லூர் பகுதியில் திமுக பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.எம்.சாமி இல்லத்தில் நான்கு பேர் கொண்ட குழுவினர் சோதனை நடந்தி வருகின்றனர்.மீனா ஜெயக்குமார் மற்றும் எஸ்.எம்.சாமி ஆகியோர் அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளர்கள் என்பதுடன் ரியல் எஸ்டேட் தொழிலிலும் தொடர்புயவர்களாக இருந்து வருகின்றனர். மீனா ஜெயக்குமாரின் கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் உட்பட வேறு சில தொழில்களிலும் தொடர்புடையவர்கள் என்பதால் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது. இதேபோல சவுரிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள காசாகிராண்ட் கட்டுமான அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.நான்கு கார்களில் வந்துள்ள அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் இரு தளங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல கோவை பீளமேடு பகுதியில் உள்ள Sheffield tower என்ற இயற்கை உணவு மற்றும் கட்டுமான நிறுவனத்தில் வருமானவரித்துறையின் 15 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 4 கார்களில் வந்து சோதனை நடத்தி வருகின்றனர்.திமுக பிரமுகர் மீனா ஜெயகுமாரின் மகன் ஸ்ரீராம் இந்த நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள நிலையில் இந்த நிறுவனத்திலும் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story