கூட்டணி குறித்து பேச நான் யாரையும் சந்திக்கவில்லை - சி.வி.சண்முகம்

கூட்டணி குறித்து பேச நான் யாரையும் சந்திக்கவில்லை - சி.வி.சண்முகம்

 சி.வி.சண்முகம்

கூட்டணி குறித்து பேச நான் யாரையும் சந்திக்கவில்லை என்றும், ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானது என்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. நேற்று முன்தினம் இரவு சந்தித்ததாகவும், கூட்டணி குறித்தும், தொகுதி ஒதுக்கீடு சம்மந்தமாக பேசியதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா தீவனூரில் கொண்டாடப்பட்டது. விழாவில் சி.வி.சண்முகம் எம்.பி. கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். விழா முடிந்ததும் கூட்டணி குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்தது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சி.வி.சண்முகம் எம்.பி., நான் யாரை யும் சந்திக்கவில்லை என்றும், ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானது என்றும் கூறிவிட்டு உடனடியாக அங்கிருந்து காரில் ஏறி சென்று விட்டார்.

Tags

Next Story