ஒத்து வராவிட்டால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி - மநீம

கட்சி கொள்கைகளோடு எந்த கட்சியும் ஒத்து வராத பட்சத்தில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மையம் தனித்துப் போட்டியிட்டும் என மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மொரியா தெரிவித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மைய கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மக்கள் நீதி மையத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் துணை தலைவர் மொரியா உள்ளிட்ட 32 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை அதன் பின் அடுத்த சட்டமன்றத் தேர்தலை எப்படி செயல்படுவது உள்ளிட்டவை குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின் மக்கள் நீதி மையத்தின் துணைத் தலைவர் மொரியா செய்தியாளர்களை சந்தித்தார். செயற்குழு கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார். கட்சி கூட்டணி குறித்து முடிவு செய்ய குழு அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது . கட்சி கொள்கைகளோடு எந்த கட்சியும் ஒத்து வராத பட்சத்தில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மையம் தனித்துப் போட்டியிட்டும் என‌ தெரிவித்துள்ளார்.

Tags

Next Story