ஃபெலிக்ஸ் வழக்கில் நீதிமன்றம் காவல்துறைக்கு அதிரடி உத்தரவு!

ஃபெலிக்ஸ் வழக்கில் நீதிமன்றம் காவல்துறைக்கு அதிரடி உத்தரவு!

உயர் நீதிமன்றம்

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமின் கோரி வழக்கில் சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தாக்கல் செய்த ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது என ஜாமீன் கோரி பெலிக்ஸ் ஜெரால்டு தாக்கல் செய்த மனுவில், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்க மாட்டேன் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Tags

Next Story