திருவையாறில் ஜன.26 ல் தியாகராஜர் ஆராதனை விழா துவக்கம்

திருவையாறில் ஜன.26 ல் தியாகராஜர் ஆராதனை விழா துவக்கம்

திருவையாறில் ஜன.26ல் தியாகராஜர் ஆராதனை விழா துவங்குகிறது. 

திருவையாறில் ஜன.26ல் தியாகராஜர் ஆராதனை விழா துவங்குகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் 177 ஆவது ஆராதனை விழா ஜன.26 ஆம் தேதி தொடங்கி 30 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 177 -ஆவது ஆராதனை விழா வருகிற ஜனவரி 26-ம் தேதி தொடங்கி 30 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில், நிறைவு நாளான ஜனவரி 30 -ஆம் தேதி காலை பஞ்சரத்ன கீர்த்தனைகள் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஏராளமான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதியாகபிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர். இதையொட்டி, திருவையாறு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரம வளாகத்தில் பந்தல் கால் நடும் விழா டிச.14 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Tags

Next Story