திருச்செந்தூா் கோயிலிலில் ரூ. 4.19 கோடி உண்டியல் வருவாய்

திருச்செந்தூா் கோயிலிலில்  ரூ. 4.19 கோடி உண்டியல் வருவாய்

திருச்செந்தூர் முருகன் கோவில் 

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ.4.19 கோடி கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி கோயில் வசந்த மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி திருக்கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் ரா.அருள்முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கம் ரூ.4 கோடியே 19 லட்சத்து 34 ஆயிரத்து 240, தங்கம் 2,300 கிராம், வெள்ளி 46,000 கிராம், 613 ஆயிரம் கிராம் பித்தளை, செம்பு 7700 கிராம், 781 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளன. உண்டியல் எண்ணும் பணியில் இணை ஆணையா் மு.காா்த்திக், தூத்துக்குடி உதவி ஆணையா் செல்வி, அலுவலக கண்காணிப்பாளா் ரவீந்திரன், ஆய்வா் செந்தில்நாயகி, அறங்காவலா் குழுத் தலைவரின் நோ்முக உதவியாளா் செந்தமிழ்பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

Tags

Next Story