தலைவர்களின் முன்னிலையில் பதவியேற்பு விழா: செல்வபெருந்தகை

தலைவர்களின் முன்னிலையில் பதவியேற்பு விழா: செல்வபெருந்தகை

செல்வ பெருந்தகை

இன்னும் ஓரிரு நாளில் தலைவர்களின் முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்ததையடுத்து சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.

கட்சியின் மூத்த தலைவர்கள் என்னை மாநில தலைவராக நியமனம் செய்தார்கள். இன்னும் ஓரிரு நாளில் தலைவர்களின் முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெறும்.

அனுபவமுள்ள தலைவர்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளார்கள் இன்னும் 500 காலத்திற்கு பிறகு கூட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழிநடத்த தலைவர்கள் உள்ளார்கள். காங்கிரஸ் ஆட்சி இல்லாமல் கூட காங்கிரஸ் கட்சி உயிரோட்டத்துடன் செயல்படும்.‌

Tags

Next Story