பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு - அமைச்சர் சேகர் பாபு

பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு - அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு 

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செங்கல்பட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும், 1 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 2,310 பேருந்துகள் இயக்கப்படும். பொங்கலுக்கு இந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்படுத்துவார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார்'' எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story