தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 5வது நாளாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.  

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 5வது நாளாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை பெய்து வருகிறது.இதனால் நீர் நிலைகள் மற்றும் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.இதனால் கோதையார் ,தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தண்ணிர் கரைபுரண்டு ஓடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் 5 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அறிவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Tags

Next Story