தமிழகத்தில் கூலிப்படைகள் அதிகரிப்பு: ஏ.சி சண்முகம்

தமிழகத்தில் கூலிப்படைகள் அதிகரிப்பு: ஏ.சி சண்முகம்

செய்தியாளர்களை சந்திக்கும் ஏ.சி சண்முகம்


தமிழகத்தில் கூலிப்படைகள் அதிகரித்துள்ளதாகவும்ர முதல்வர் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார்.

வேலூரில் இன்று புதிய நீதி கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஏ.சி சண்முகம், தமிழகத்தில் அவ்வப்போது குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தமிழகத்தில் காவல்துறை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. குற்ற சம்பவங்கள் தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீச முடியும் என்ற தைரியம், சமூக விரோதிகளிடம் ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் கூலிப்படைகள் அதிகரித்துள்ளது.

தமிழக முதல்வர் அதனை கட்டுப்படுத்த வேண்டும். காவல்துறையினர் மீது இருக்கின்ற பயம் குறைந்ததால் தான் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது அப்போது நடந்து வருகிறது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் காணப்பட்டது, தற்போது அவை குறைந்துள்ளது.

இருந்தபோதிலும் தமிழக மீனவர்கள் எல்லை தான்டாமல் மீன்பிடித்துக் கொள்ள வேண்டும் . எனவே தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க செல்ல வேண்டும். தற்பொழுது சிறை பிடித்துள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய நீதி கட்சி வலியுறுத்துள்ளது. கடந்த காலங்களை விட தற்போது தமிழகத்தில் தற்போது பாஜக அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுற்றுபயணம் முடிந்த பின்பு அதனுடைய வளர்ச்சி இரட்டிப்பாக இருக்கும். கொள்கை ரீதியாக புதிய நிதி கட்சி முடிவு எடுத்து , பாஜகவில் போட்டியிடுகிறது. உலகத் தலைவர்களில் ஒருவராக நரேந்திர மோடி கருதப்படுகிறார் . அவரின் செயல்கள் உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும் என்பதுதான் புதிய நீதி கட்சியின் கொள்கை. கொள்கை ரீதியாக பாஜக சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டியிடும். மத்திய மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குற்ற சம்பவங்கள் மத்திய அரசால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும் கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நாடு முழுவதும் குறைந்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் நாட்டில் பல்வேறு இடங்களில் என் ஐ ஏ சோதனை நடைபெற்று வருகிறது. மாநில அரசுகள் தங்களுக்குள் உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி சட்ட ஒழுங்கை சரி செய்ய வேண்டும் என்று அவர் ஏ.சி சண்முகம் கூறினார்.

Tags

Next Story