பூக்களின் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு

பூக்களின் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு

பூக்களின் விலை உயர்வு 

கோயம்பேடு பூசந்தையில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் விலை சற்று அதிகரித்துள்ளது. மல்லி கடந்த வாரம் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 200 ரூபாய் அதிகரித்து 1000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது . சம்பங்கி பூ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 30 ரூபாய் அதிகரித்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பன்னீர் ரோஸ் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 30 ரூபாய் அதிகரித்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரளிப்பூ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 20 அதிகரித்து 50 ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனகாம்பரம் 800 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 200 அதிகரித்து 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சாமந்திப்பூ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 50 ரூபாய் அதிகரித்து 100 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாதி மல்லி 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 200 அதிகரித்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாக்லேட் ரோஸ் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் இன்று 40 அதிகரித்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு மாதங்களாகவே பூக்களின் விலை அடிமட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு வரங்களாக பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. திருமண நிகழ்ச்சிகளை முன்னிட்டு பூக்களின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story