ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது ஒகேனக்கல் காவிரி ஆறு, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழையின் அளவைப் பொறுத்து, நீர்வரத்து அதிகரித்தும் சரிந்தும் காணப்பட்டு வரும் நிலையில் சில தினங்களாக காவிரி ஆற்றில் வினாடிக்கு 200 கனஅடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று ஜூன் 29 மாலை 6 மணி நிலவரப்படி காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பொழியும் கனமழையின் காரணமாக வினாடிக்கு 1200 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் நீர்வரத்தை மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர்.

Tags

Next Story