ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் 

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை வினாடிக்கு சுமார் 6000 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து, இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 8000 கனஅடியாக அதிகரித்துள்ளது. வனப்பகுதிகளில் பெய்த மழையை அடுத்து இந்த தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. காவிரி கரையோரத்தில் உள்ள வனப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்து தற்போது வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தமிழக காவிரி கரையோர எல்லை பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றன. இதனால் தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நேற்று வரை வினாடிக்கு 2000 கன அடியாக இருந்த நீர்வரத்தானது படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை நேரத்தில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென அதிகரித்த இந்த நீர்வரத்தானது மேலும் படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக நீடித்து வருகிறது. இந்த நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. மேலும் தற்போது அதிகரித்துள்ள இந்த நீர்வரத்து, சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்தே அதிகரிக்கவோ குறையவோ வாய்ப்பு உள்ளது என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story