''5 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது'' - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!
![5 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது - அமைச்சர் செஞ்சி மஸ்தான்! 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!](https://king24x7.com/h-upload/2024/06/13/547431--.webp)
செஞ்சி மஸ்தான்
குவைத் தீ விபத்து குறித்து அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.
அதாவது, ''குவைத்தில் 195 பேர் தங்கியிருந்த கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யாரும் அச்சப்பட தேவையில்லை, அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெளிநாடு செல்லும் தமிழர்களின் நலனுக்காக தான், அயலக தமிழர் நலத்துறை உருவாக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இதுவரை 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உயிரிழந்த தமிழர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு அறிவித்த எண்ணிற்கு சிலர் தொடர்பு கொண்டுள்ளனர். குவைத்தில் உள்ள தமிழர்களின் குடும்பத்தினர், தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.'' எனத் தெரிவித்துள்ளார்.