வரும் 10 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை நேர்காணல்

வரும் 10 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை நேர்காணல்

நேர்காணல் 

திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பி விண்ணப்பித்தவர்களுக்கு வருகின்ற 10 ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகிற 10-3-2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள சுழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்.

இந்நேர்காணலின்போது, அந்தந்த நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மட்டுமே இந்நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். வேட்புமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்களையோ பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Tags

Next Story