புகாரை திரும்ப பெற மிரட்டல்: நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புகாரை திரும்ப பெற மிரட்டல்: நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் தாசில்தாரருக்கு எதிராக அளித்த புகாரை திரும்பப் பெறும்படி மிரட்டல் வந்துள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


முன்னாள் தாசில்தாரருக்கு எதிராக அளித்த புகாரை திரும்பப் பெறும்படி மிரட்டல் வந்துள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏலகிரி அருகே உள்ள அதனவூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். தாசில்தாரருக்கு எதிராக அளித்த புகாரை விசாரித்து 12 வாரங்களில் முடிவெடுக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த புகாரை திரும்பப் பெறும்படி கூலிப்படையினரை வைத்து தன்னை மிரட்டி வருவதாகவும், இதுதொடர்பாக ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தும், தாசில்தாரர் அரசு ஊழியர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பாளர்களுக்கு உடந்தையாக இருந்ததாக திருப்பத்தூர் முன்னாள் தாசில்தாரருக்கு எதிராக அளித்த புகாரை திரும்பப் பெறும்படி மிரட்டல் வந்துள்ளது தொடர்பாக, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஜோலார்பேட்டை போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags

Next Story