மதுபோதையில் பணி - அரூர் கிளை சிறை தலைமை வார்டன் சஸ்பெண்ட்

மதுபோதையில் பணி - அரூர் கிளை சிறை தலைமை வார்டன் சஸ்பெண்ட்
அரூர் சிறையில் சேலம் மத்திய சிறை எஸ்.பி ஆய்வு 
அரூர் கிளை சிறையில் சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளரும் கட்டுப்பாட்டு அலுவலருமான ஜி வினோத் ஆய்வு மேற்கொண்டார். மதுபோதையில் பணி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்ட தலைமை வார்டனை சஸ்பெண்ட் செய்தார்.

சேலம் மத்திய சிறைச்சாலையின் கீழ் அரூர் கிளை சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. கிளை சிறையில் சிறை காப்பாளர், காவலர்கள், சமையலர் என13 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தலைமை வார்டன் அசோக்குமார் மது போதையில் பணியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை செய்துள்ளனர். சோதனையின் போது மது அருந்தி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிறைத்துறை டிஜிபி-க்கு இது குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறைத்துறை டிஜிபி அம்ரீஷ் புஜாரி உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் ஜி வினோத் மது போதையில் பணி செய்த தலைமை வார்டன் அசோக்குமாரை இன்று பணியிடை நீக்கம் செய்தார். தொடர்ந்து அரூர் சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பாளர் சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், பதிவேடு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது அரூர் கிளை சிறைச்சாலை கண்காணிப்பாளர் அருண் உடன் இருந்தார்.

Tags

Next Story