பாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

பாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

வேட்பாளர் அறிமுக கூட்டம்

அரியலூரில் சிதம்பரம் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

-அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.கூட்டத்தில் வேட்பாளர் கார்த்தியாயினி தன்னை அறிமுகப்படுத்தி பேசியது: அரியலூரில் ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலையை நிறுவியவர் காடுவெட்டி குரு. அவர் சாதிப் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் குரல் கொடுத்தார்.அதே போல் சமூக நீதிக்காக போராடியவர் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இப்படி பாமகவின் சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். நான் வேறு மாவட்டத்தைச் சார்ந்தவராக இருந்தாலும். இந்த தொகுதியில் வெற்றிப் பெற்றவுடன் இங்குள்ள மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன். இங்குள்ள காலாவதியான சுரங்களை மூட நடவடிக்கை எடுப்பேன் என்றார்.கூட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார்.

பாமக மாவட்டச் செயலர் காடுவெட்டி ரவி,அதிமுக(ஓபிஎஸ்) அணி மாவட்டச் செயலர் விஜய்பார்த்திபன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

Tags

Next Story