ஐபிஎல் போட்டி: மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதி இல்லை

ஐபிஎல் போட்டி: மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதி இல்லை

சென்னையில் அரையிறுதி கிரிக்கெட் போட்டிகளுக்கு மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதி இல்லை என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


சென்னையில் அரையிறுதி கிரிக்கெட் போட்டிகளுக்கு மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதி இல்லை என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல்(IPL)-2024 கிரிக்கெட் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் வரும் 24.05.2024 மற்றும் 26.05.2024 ஆகிய நாட்களில் சென்னை, MA சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. முந்தைய கிரிக்கெட் போட்டிகளில் IPL போட்டிக்கான Online/pre-printed டிக்கெட் வைத்திருந்தால், அந்த டிக்கெட்டுகளை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வரும் 24.05.2024 மற்றும் 26.05.2024 நாட்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதி இல்லை. எனவே பயணிகள் பயண கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு பெற்று பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags

Next Story