திட்டப் பணிகளில் முறைகேடு - ஊராட்சி தலைவர்கள் டிஸ்மிஸ்

சேலம் மாவட்டத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவிகளை பதவி நீக்கம் செய்து கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசிதழில் வெளியாகி உள்ள விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியம், தேவியாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவி அமுதா. இவர் ஊராட்சியில் தவறான தீர்மானம் நிறைவேற்றி, வேலை உத்தரவு வழங்காமல் 3 பணிகளை ஒப்பந்ததாரர் மேற்கொள்ள அனுமதித்து உள்ளார். அவரது கணவர் மற்றும் ஊராட்சி செயலாளரும் சேர்ந்து ஒப்பந்ததாரரிடம் திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டதற்காக பட்டியல் தொகை வழங்க லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். எனவே தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி ஊராட்சி மன்ற தலைவி அமுதா, ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார்.

இதே போன்று ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவி கலைச்செல்வி. இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கல்கரை, மண்கரை அமைக்கும் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் 3 லட்சம் ரூபாய் முறைகேடு செய்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களின் அட்டைகளை அவர்களிடம் அளிக்காமல், தன் வசம் வைத்து உள்ளார். எனவே பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவி கலைச்செல்வி, பதவி நீக்கம் செய்யப்படுகிறார். இவ்வாறு தமிழக அரசிதழில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story