சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை நீக்க ஜவாஹிருல்லா அறிக்கை

சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை நீக்க ஜவாஹிருல்லா அறிக்கை

ஆறாம் வகுப்பு கணக்கு பாடத்தில் உள்ள சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை பள்ளிக்கல்வித்துறை நீக்க வேண்டும் என ஜவாஹிருல்லா அறிக்க வெளியிட்டு உள்ளார்.


ஆறாம் வகுப்பு கணக்கு பாடத்தில் உள்ள சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை பள்ளிக்கல்வித்துறை நீக்க வேண்டும் என ஜவாஹிருல்லா அறிக்க வெளியிட்டு உள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆன்லைன் ரம்மி மசோதா சட்டம் குறித்தும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த நிலையில் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் சார்பில் வழங்கப்படும் ஆறாம் வகுப்பு கணித புத்தகத்தில் கணித பாடத்தை எளிதில் விளக்கும் வகையில் சீட்டு சீட்டுக்கட்டு விளையாட்டை உவமையாக வைத்து விளக்கம் கணித பாடம் இருந்ததை அப்போதே அரசியல் கட்சியினர் மற்றும் கல்வியாளர்கள் விமர்சனம் செய்து இருந்தனர். இருந்த போதும் தற்போது வரை அந்த பாடப்பகுதி நீக்கப்படவில்லை இந்நிலையில் 2024 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்கள் அச்சிடும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஆறாம் வகுப்பு கணித பாடப்புத்தகத்தில் உள்ள அந்த சர்ச்சைக்குரிய சீட்டு கட்டு குறித்த பாடப்பகுதியை நீக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆறாம் வகுப்பு கணக்கு பாடத்தில் மூன்றாம் பருவத்தின் தொகுதி இரண்டாவது புத்தகத்தில் இயல் இரண்டில் முழுக்கள் எனும் தலைப்பில் ஆன பாடம் இடம்பெற்றுள்ளது. கணிதத்தில் முழுக்கள் குறித்து உவமையுடன் நடத்த பல்வேறு வழிமுறைகள் இருந்தும் சீட்டுக்கட்டு முறையை மாணவர்களிடையே அறிமுகப்படுத்துவது ஏற்புடையது அல்ல. தற்போது ஆன்லைன் ரம்மி மற்றும் இதர சூதாட்டங்களில் சீட்டு கட்டு முறையே முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை அரசே தடை செய்திருந்தது. இத்தகைய சூழலில் மாணவர் பருவத்திலேயே சீட்டு கட்டு விளையாட்டு குறித்தும் அதன் விளையாட்டு உத்தி குறித்தும் விரிவாக பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்திருப்பது ஏற்புடையது அல்ல. பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்திலும் இது போன்ற பாடங்கள் இருந்தன. அதனை கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை நீக்கி கேள்வித்தாள்களிலும் அந்த பாடங்கள் இடம்பெறாத வகையில் பார்த்துக் கொண்டது. இப்பாடத்திட்டம் அதிமுக அரசு காலத்தில் வடிவமைக்கப்பட்டது என்றாலும் கூட திராவிட மாடல் ஆட்சியில் இதே பாடம் நீடிப்பது கொள்கைக்கு முரணானது. எனவே பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அந்த பாடத்தை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story