ஜெயக்குமார் மரணம் வழக்கு - 32 பேருக்கு சம்மன் விசாரணை சி.பி.சி.ஐ.டி தெரிவிப்பு !!

ஜெயக்குமார் மரணம் வழக்கு - 32 பேருக்கு சம்மன் விசாரணை சி.பி.சி.ஐ.டி தெரிவிப்பு !!

ஜெயக்குமார் மரணம் வழக்கு

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த நான்கு நாட்களாக சி.பி.சி.ஐ.டிஅதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தடையங்கள் தேடுதல் ஜெயக்குமாரின் குடும்பத்திடம் சம்பவத்தன்று நடந்தவற்றை எழுத்துப்பூர்வமாக வாக்குமூலமாக பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கில் ஏற்கனவே போலீசார் விசாரிக்கப்பட்ட அவரது உறவினர்கள் தொழில் ரீதியில் அவருடைய பழகிய நண்பர் அனைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்காக ஒரு குழு கரைசுத்துப்புதூரில் விசாரணை மேற்கொள்கிறது. மேலும் ஜெயக்குமாரின் செல்போனுக்கு கடைசி இரண்டு நாட்கள் வந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் விபரங்களை கேட்டு அறிய முடிவு செய்தனர்.

அவர் கடிதத்தில் குறிப்பிட்ட தொழிலதிபர், உறவினர்கள், நெருக்கமானவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 32 பேருக்கு இன்னும் ஓரிரு நாளில் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story