திருவிடைமருதூர் அருகே ஜெயங்கொண்டம் எம்எல்ஏ உறவினர் படுகொலை

திருவிடைமருதூர் அருகே ஜெயங்கொண்டம் எம்எல்ஏ உறவினர் படுகொலை

கலைவாணன் 

திருவிடைமருதூர் அருகே ஜெயங்கொண்டம் எம்எல்ஏ உறவினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, பந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் கலைவாணன் (30). இவர் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணனின் உறவினர் ஆவார். நேற்று இரவு எட்டு மணி அளவில் கலைவாணன் தனது வீட்டிலிருந்து வயலுக்கு மோட்டார் போடுவதற்கு சென்றவரை அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். வயலுக்கு சென்றவர் திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் 12 மணி அளவில் வயலுக்கு சென்று பார்த்த பொழுது மின்மோட்டார் அருகில் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பந்தநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story