சேலத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்

சேலத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்
சேலத்தில் ஓடும் பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண் ஒருவர் அணிந்திருந்த நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

சேலம் கன்னங்குறிச்சி ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் வசந்தி (51). இவரது 4 வயது பேத்திக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்து வருகிறது. இதற்காக பேத்தியை சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக இன்று காலை கன்னங்குறிச்சியில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு டவுன் பஸ்சில் சென்றார். பின்னர் அங்கு சென்று சென்னை பேருந்தில் ஏறி அமர்ந்தார்.

அப்போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் நகை காணாமல் போயிருந்ததை கண்டு திடுக்கிட்டார். பின்னர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது பற்றி பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரித்தனர். அதில், பேருந்தில் பயணம் செய்த போது கூட்டநெரிசலை பயன்படுத்தி வசந்தி அணிந்திருந்த நகையை மர்மநபர்கள் திருடி இருப்பது தெரிந்தது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story