ஜெயங்கொண்டம்: 50க்கும் மேற்பட்ட செம்மண் லாரிகளை சிறைபிடித்த மக்கள்

ஜெயங்கொண்டம்: 50க்கும் மேற்பட்ட செம்மண் லாரிகளை சிறைபிடித்த மக்கள்

மக்கள் சாலை மறியல்

ஜெயங்கொண்டம் அருகே சாத்தம்பாடி கிராமத்தில் பர்மிட் இல்லாமல் ஓடும் செம்மண் லாளிகளால் அதிக அளவில் விபத்து ஏற்படுவதாக கூறி, 50க்கும் மேற்பட்ட செம்மண் லாரிகளை மறித்து பொதுமக்கள் மறியல் போராட்டம் நடந்தியதால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சாத்தம்பாடி அருகே செம்மண் வாரி செயல்படுவதாக கூறப்படுகிறது. இங்கிருந்து நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட லாரிகள் செம்மண்ணை ஏற்றிக்கொண்டு செல்வதாக தெரிகிறது.

அதிக அளவில் செம்மண் லாரிகள் இயக்கப்படுவதால் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு இரண்டு மனித உயிர்கள் பலியாக உள்ளது. இந்த நிலையில் சாத்தம்பாடி அரசு பள்ளி அருகே செம்மண் ஏற்றிச்சென்ற லாரி மோதி ஆட்டுக்குட்டி ஒன்று பரிதாபமாக உடல் நசங்கி இறந்தது.

. இதில் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு லாரிகளை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாத்தம்பாடி பகுதியில் 500க்கும் மேற்பட்ட செம்மண் லாரிகள் பர்மிட் இல்லாமல் செல்வதாகவும் நாள்தோறும் உயிர் வலிகள் ஏற்படுவதாகும் குற்றம் சாட்டி கோஷங்கள் எழுப்பினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்ததால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது‌.

பின்னர் தகவல் அறிந்து வந்த விக்கிரமங்கலம் போலீசார் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் நடத்திய இப்போராட்டம் காரணமாக சாத்தம்பாடி-முத்துவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story