கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் : 4 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் : 4 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு

கள்ளக்குறிச்சி பள்ளியில் வன்முறை (பைல் படம்) 

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த வன்முறை தொடர்பான வழக்கில், 4 மாதங்களில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த வன்முறை தொடர்பான வழக்கில், 4 மாதங்களில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும் புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 4 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றால் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று நீதிபதி தெரிவித்தார். மாணவி மரணம் அடைந்ததை அடுத்து நிகழ்ந்த வன்முறை தொடர்பான வழக்கை வேறு புலனாய்வு குழுவுக்கு மாற்றக்கோரி பள்ளி தாளாளர் ரவிக்குமார் தாக்கல் செய்த மனு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story