12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கமலஹாசன் வாழ்த்து

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கமலஹாசன் வாழ்த்து
கமலஹாசன்
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் 12ம் வகுப்புதேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் 95% வென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களே, மேற்கல்வி வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன உங்கள் முன். அதிலும் கரைதேர்ந்து வாருங்கள். நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ஆகலாம். வெற்றி பெறாத மாணவர்களே, இதை நீங்கள் தோல்வியாகக் கருதத் தேவையில்லை. உங்களுக்கான வெற்றிகள் அடுத்தடுத்துக் காத்திருக்கின்றன. உங்களுக்கு என் வாழ்த்துகள்.

Tags

Next Story