தி.மு.க நாடாளுமன்றக் குழு தலைவராக கனிமொழி எம்பி நியமனம்

தி.மு.க நாடாளுமன்றக் குழு தலைவராக கனிமொழி எம்பி நியமனம்

 கனிமொழி எம்பி 

தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவராக கனிமொழியை நியமித்து கட்சியின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவராக கனிமொழி எம்பி நியமிக்கப்படுவதாக கட்சியின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களவை - மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து தி.மு.க நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி; மக்களைவைக் குழுத் தலைவராக கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி; மக்களைவைக் குழுத் துணைத் தலைவராக கழக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மக்களைவை கொறடாவாக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, மாநிலங்களவைக்குழுத் தலைவராக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், மாநிலங்களவை கொறடாவாக தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், இரு அவைகளின் பொருளாளராக கொள்கைப் பரப்பு செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story