காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு கனிமொழி எம்பி கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு கனிமொழி எம்பி கண்டனம்

கனிமொழி எம்பி கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் வருமான வரித் துறையினர் முடக்கியுள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், "காங்கிரஸின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தின் தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகளை முடக்கும் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்நடவடிக்கை, ஜனநாயக முறையில் தேர்தலை சந்திக்க பயப்படும் பாஜகவின் அச்சத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story