தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி போட்டியிட விருப்ப மனு

தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி போட்டியிட விருப்ப மனு

கனிமொழி

வருகிற நாடாளுமன்ற தேர்தலில்  கனிமொழி எம்.பி. மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி அமைச்சர்கள் விருப்பமனு வழங்கினர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தி உள்ளது. முதல்கட்டமாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியையும் தி.மு.க. ஒதுக்கி உள்ளது. அதேபோல், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் தலா 2 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. தற்போது, தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்வு நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று, தி.மு.க. எம்.பி. கனிமொழி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி, தி.மு.க தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில், தமிழ்நாடு மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விருப்பமனுவை பூர்த்தி செய்து ரூ.50 ஆயிரம் கட்டணத்துடன் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் வழங்கினார். அதேபோல், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் வர்த்தகரணி இணை செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிஷங்கர் உள்பட 38 பேர் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட வேண்டும் என்று விருப்பமனு வழங்கினர். மேலும், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிட வேண்டும் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் 12 பேர் விருப்பமனுக்களை நேற்று வழங்கினார்கள்.

Tags

Next Story