கன்னியாகுமரி : வடிந்தது வெள்ளம்,வீடு திரும்பிய மக்கள்

கன்னியாகுமரி : வடிந்தது வெள்ளம்,வீடு திரும்பிய மக்கள்
மழை நிவாரண முகாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அதனை தொடர்ந்து நாகர்கோவில், ஏழுதேசம், கன்னியாகுமரி, கோவளம், தோவாளை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்பது தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டது. முகாம்களில் 239 குடும்பங்களை சேர்ந்த 756 பேர் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். தற்பொழுது வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்ததையடுத்து நிவாரண முகாம்களில் தங்கி இருந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். அதனை தொடர்ந்து நிவாரண முகாம்கள் இன்று மூடப்பட்டது.

Tags

Next Story