வள்ளலார் மன்றத்தில் கார்த்திகை மாத பூச விழா

வள்ளலார் மன்றத்தில் கார்த்திகை மாத பூச விழா

வள்ளலார் மன்றம் கார்த்திகை பூச விழா 

உலக நலனுக்காக பிராத்தனை மேற்கொள்ளப்பட்டது

சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் கார்த்திகை மாத பூச விழா நடந்தது.மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் முத்துக்கருப்பன், ரோட்டரி தலைவர் நடராஜன், பொருளாளர் சங்கர், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன் முன்னிலை வகித்தனர்.

ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி வரவேற்றார்.தமிழ் படைப்பாளர் சங்கத் தலைவர் இளையாப்பிள்ளை தலைமையில் அகவல் படித்து உலக மக்கள் நலனுக்காக பிரார்த்திக்கப்பட்டது. விழாவில், ரோட்டரி தேர்வு தலைவர் அசோக், அரிமா மாவட்ட தலைவர் வேலு, ஆசிரியர் பொன்னுசாமி, ரோட்டரி துணை ஆளுனர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு ஜோதி தரிசனத்திற்கு பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story