கேசவ விநாயகம் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

கேசவ விநாயகம் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

கேசவ விநாயகம் 

தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி தமிழக பா.ஜ.க அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி தமிழக பா.ஜ.க அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தொடர்ந்த வழக்கில், இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று கேசவ விநாயகம் தரப்பு தெரிவித்துள்ளது.

கேசவ விநயாகத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படாத நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார் என்று சிபிசிஐடி வாதம் செய்தது வழக்கு விசாரணை ஜூன் மூன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags

Next Story