கோடநாடு வழக்கு - மனோஜ்சாமியிடம் விசாரணை

கோடநாடு வழக்கு - மனோஜ்சாமியிடம் விசாரணை

மனோஜ் சாமி 

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணைக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான 9வது குற்றவாளி மனோஜ் சாமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு விசாரணை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த கொலை, கொள்ளை வழக்கின் ஒன்பதாவது குற்றவாளியான மனோஜ்சாமி என்பவருக்கு சிபிசிஐடி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி இருத்தனர். இதனை தொடர்ந்து இன்று காலை சிபிசிஐடி அலுவலகத்தில் மனோஜ்சாமி ஆஜரானார். அவரிடம் ஏடிஎஸ்பி முருகசாமி விசாரணை மேற்கொண்டு வருகின்றார். ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சயானிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது மனோஜ்சாமியிடம் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story