10 நாட்கள் நடக்கவுள்ள பஞ்சமுக வாராஹிக்கு லட்சம் மஞ்சள் லட்சார்ச்சனை

10 நாட்கள் நடக்கவுள்ள பஞ்சமுக வாராஹிக்கு லட்சம் மஞ்சள் லட்சார்ச்சனை

தன்வந்திரி பீடம் 

வாலாஜா தன்வந்திரி பீடத்தில் பஞ்சமுக வாராஹிக்கு லட்சம் மஞ்சள் லட்சார்ச்சனை 10 நாட்கள் நடக்கிறது.

ராணிப்பேட்டை,வாலாஜாவை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வசந்த நவராத்திரி மகாற்சவம் நடைபெற உள்ளது. இதில் பீடத்தின் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு முரளிதர சுவாமிகள் அருளாசியுடன் இன்று முதல் 18-ந் தேதி (வியாழக்கிழமை) வரை காலை,

மாலை இரு வேளையும் பஞ்சமுக வாராஹிக்கு லட்சம் மஞ்சள் கொண்டு லட்சார்ச்சனை நடைபெறும். மேலும் அம்பிகைகளுக்கு தினமும் ஹோமம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் உலக நலன் கருதி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story