அதிமுக ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி, சசிகலாவுக்கு கடிதம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஓ பி எஸ், இ பி எஸ், டி டி வி, சசிகலாவுக்கு ஒற்றுமை வேண்டி சந்திக்க விரும்புகிறோம் என்று கடிதம் அனுப்பபட்டுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பு குழு சமீபத்தில் அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்க புகழேந்தி ,ஜே சி டி பிரபாகரன், கே சி பழனிசாமி உள்ளிட்டோரால் துவங்கப்பட்டது. தற்போது அதிமுகவில் தனித்தனியே பிரிந்து இருக்கக்கூடிய தற்பொழுது அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி கே சசிகலா, முன்னாள் முதலமைச்சரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு தனித்தனியே இந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ஏழை எளிய மக்களின் வாழ்விற்காக மக்களின் பெருவாரியான ஆதரவோடு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடங்கிய கட்சி, தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னால் நம்மிடம் ஒற்றுமை ஏற்பட்டு மீண்டும் பிளவு ஏற்பட்டது. ஆனால் இப்பொழுது தோல்விகள் தொடர்கிறது. மறப்போம். மன்னிப்போம் என்கிற மாபெரும் தத்துவத்தை அனைவரும் மனதில் கொண்டு ஒன்று பட வேண்டும். என்கிற உயரிய எண்ணமே எங்களது வேண்டுகோள் பிளவு பட்டு இருந்த இயக்கத்தை மன கசப்புகளை மறந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், ஜானகி அம்மையாரும் ஒருங்கிணைத்ததை நினைவு கூர கடமைபட்டுள்ளோம். ஒற்றுமை வேண்டி தங்களை நேரில் சந்திக்க விரும்புகிறோம். இதனை தாங்கள் வரவேற்பீர்கள் என்று நம்புகிறோம் என கடிதத்தில் குறிப்பிட்டு அனுப்பியுள்ளனர்.

Tags

Next Story