லாரிமோதி ஓட்டுனர் உயிரிழப்பு

லாரிமோதி ஓட்டுனர் உயிரிழப்பு

கொல்லாபுரம் இறைவன் நகர் அருகே லாரிமோதி ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கொல்லாபுரம் இறைவன் நகர் அருகே லாரிமோதி ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரியலூர், மே.12- கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர். லாரி ஓட்டுனரான இவர் அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராமத்திலுள்ள டால்மியா சிமெண்ட் ஆலைக்கு கரி ஏற்றிவந்துள்ளார். பின்னர் கரியினை இறக்கிவிட்டு கொல்லாபுரம் இறைவன் நகர் அருகே லாரியினை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றுவிட்டு மீண்டும் லாரியில் ஏற முற்பட்டபோது ராம்கோ சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் ஏற்றிவந்த நாகபட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் ஓட்டிவந்த லாரி மோதி விபத்துள்ளானது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே இன்று உயிர் இழந்தார். இதனையறிந்த அரியலூர் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story