காற்றழுத்த தாழ்வு நிலை -2வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்

காற்றழுத்த தாழ்வு நிலை -2வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் 

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது மேலும் கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் மன்னர் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசகூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.இதேபோன்று திரேஷ் புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் நாட்டுப்படகுகளும் கடலுக்குமீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்

Tags

Next Story