லைகா - நடிகர் விஷால் பரிவர்த்தனை அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

லைகா நிறுவனத்திற்கும், நடிகர் விஷாலிற்கும் இடையே நடைபெற்ற பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்த அறிக்கையை நீதிமன்றம் நியமித்த ஆடிட்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
'விஷால் பிலிம் பேக்டரி' படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய ரூ. 21.29 கோடி கடனை லைகா செலுத்திய நிலையில், விஷால் திருப்பி செலுத்தவில்லை என லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் 2021ல் வழக்கு தொடர்ந்தது. லைகா நிறுவனத்திற்கும், நடிகர் விஷாலிற்கும் இடையே நடைபெற்ற பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்த அறிக்கையை நீதிமன்றம் நியமித்த ஆடிட்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆடிட்டரின் அறிக்கை குறித்து ஆராய வேண்டியுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று விஷால் தரப்பு தெரிவித்துள்ளது. விசாரணை ஜூன் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Tags

Next Story