கோவில் நிலங்களில் கல்லூரிகள் கட்ட ஆட்சேபனை உள்ளதா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கோவில் நிலங்களில் கல்லூரிகள் கட்ட ஆட்சேபனை உள்ளதா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

உயர்நீதிமன்றம்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிலங்களில் கல்லூரிகள் கட்ட ஆட்சேபனை உள்ளதா என்று அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி ?
இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிதியில் இருந்து, கல்லுாரிகள் துவக்க எதிர்ப்பு தெரிவித்து இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்பிலிருந்து கோவில் நிலங்களை மீட்டு, நல்ல பணிகளுக்கு குத்தகைக்கு விட்டு கிடைக்கும் வருவாய் மூலம் தமிழகத்தின் மொத்த பட்ஜெட்டையும் தாக்கல் செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கோவில் நிலங்களில், அரசு, கல்வி பயன்பட்டிற்காக கல்லூரிகளை கட்டுவதில் ஆட்சேபனை உள்ளதா? என்று அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story