சாந்தனின் மருத்துவ அறிக்கையை பிற்பகலுக்குள் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய சாந்தனின் மருத்துவ அறிக்கையை பிற்பகலுக்குள் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், சாந்தனை இலங்கைக்கு அனுப்ப 22 ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அவரை அனுப்பவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு சாந்தன் ஜனவரி 24ம் தேதி முதலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரால் நகர கூட முடியவில்லை என தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று பிற்பகலுக்குள் சாந்தனின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

Tags

Next Story