மகாத்மா காந்தி நினைவு நாள் : ஆளுநர், அமைச்சர்கள் மரியாதை

காந்தியடிகளின் 77வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சிய வளாகத்தில் காந்தியடிகள் 77ஆவது நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் சட்டமன்ற உறுப்பினர் ஐ ட்ரீம்ஸ் மூர்த்தி உள்ளிட்டோர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் காந்தியின் நினைவு நாளுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே மரியாதை செலுத்தப்படும் மெட்ரோ பணியின் காரணமாக எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story