நாளை மக்கள் நீதி மய்ய நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம்

நாளை மக்கள் நீதி மய்ய நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம்

மக்கள் நீதி மய்யம் 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுவதாக மக்கள் நீதி மய்ய பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் செயற்குழு பொதுக்குழு கூட்டங்களை கூட்டி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறும் இந்த நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் மக்கள் நீதி மையத்தின் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags

Next Story